நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, பிப். 7: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நாளை(பிப்.8) நடக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை தாலுகா பெரியகோட்டை, மானாமதுரை தாலுகா செய்களத்தூர், இளையான்குடி தாலுகா நாகமுகுந்தன்குடி, தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி, காரைக்குடி தாலுகா ஜெயம்கொண்டான், திருப்புத்தூர் தாலுகா ஆ.தெக்கூர், திருப்புவனம் தாலுகா அல்லிநகரம், காளையார்கோவில் தாலுகா நந்தனூர், சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஆகிய இடங்களில் ரேஷன் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை, காலை 10மணிக்கு நடக்க உள்ளது.துணை கலெக்டர் நிலையிலான மண்டல அலுவலர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ரேஷன் கார்டுதாரர்கள் கலந்துகொண்டு ரேஷன் விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: