மின்சார ஒயர் உரசி லாரி தீப்பிடித்து எரிந்தது

கோவை, பிப்.7: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து வைக்கோல் போர் ஏற்றிய லாரி நேற்று முன்தினம் இரவு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆலாந்துறை அருகே முள்ளுக்காடு பகுதியில் சென்றபோது சாலையின் மேலே சென்ற மின்கம்பி உரசி வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரிக்கும் தீ பரவியது. தகவலறிந்த தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் லாரி தீயில் எரிந்து சேதமானது.

Related Stories: