கடமலைக்குண்டு அருகே பள்ளி ஆண்டு விழா

வருசநாடு, பிப்.6: கடமலைக்குண்டு அருகே ஹயக்ரீவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் தலைமை வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். பள்ளி தாளாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பார்வதி சிறப்புரையாற்றினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரபு ,ரஞ்சித், பானு மற்றும் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories: