70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்

முசிறி, பிப்.4: வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பெர்னாட்ஷா, சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கருப்பண்ணன் உள்ளிட்ட பலர் சங்க வளர்ச்சி குறித்தும் ஓய்வூதியர்கள் நலன் பற்றியும் அரசிடம் வலியுறுத்தி பெற வேண்டிய கோரிக்கைகள் பற்றியும் விரிவாக பேசினர்.  அதனைத் தொடர்ந்து மிகவும் பழுதடைந்த நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படும் முசிறி-அழகாபட்டி சாலையை தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சீரமைக்க வேண்டும். தா.பேட்டை ஒன்றியம் எம்.புதுபட்டி ஊராட்சிக்குட்பட்ட திருமுருகன் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் இப்பகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று புதிதாக கட்டி பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை வழங்கிட முசிறி எம்எல்ஏ செல்வராஜ் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வது, 70 மற்றும் 75 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

வரும் காலங்களில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கிட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தை போன்று அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: