தி.பூண்டி விளக்குடி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, பிப். 4: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமிசெல்வம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சீராளன், தலைமை ஆசிரியர் ராஜாராமன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ராஜாராமன். செல்வம், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினர். பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்கள். அருண்மொழி, வெற்றிவேல், சந்திரசேகர், துரைராஜ், செல்வம், ஜெயபிரகாஷ், ராஜமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: