நெல்லை, பிப். 4: நாங்கு நேரியில் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு சேவை கிடைக்காததால் வாடிக்கையாளர் அவதிக்குள்ளாகின்றனர். நாங்குநேரி பகுதியில் நாங்குநேரி பரப்பாடி, பாணான்குளம், மருதகுளம் களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிஎஸ் என்எல் தொலைத்தொடர்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக நாங்குநேரி வட்டாரத்தில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். பல கிராமங்களில் சேவை முற்றிலும் தடை பட்டுள்ளது. இதனால் அவசரத்தேவைகளுக்கு கூட பிற செல்போனுக்கு தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.