பூலாம்பட்டி எஸ்கேடி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

இடைப்பாடி, ஜன.31: பூலாம்பட்டியில் செயல்பட்டு வரும் எஸ்கேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பூலாம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் லாவண்யா, செந்தில்குமார், சிறப்பு அதிகாரி ராஜசேகரன் ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். பள்ளியின் தலைவர் பரமசிவம், தாளாளர் கிருஷ்ணவேணி, நிர்வாக உறுப்பினர் மணிவண்ணன், முதல்வர் கில்பர்ட், துணை முதல்வர் சாதிக்பாஷா, மேலாளர் மணி, நிர்வாக அலுவலர் இனியவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இந்த விழாவில் மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி, அணிவகுப்பு, உடற்பயிற்சி நடனம் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், மோகன்குமார், வசந்தமாலா மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Related Stories: