வழக்கறிஞர் சங்க செயலாளர் இல்லத் திருமண விழா அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

மதுரை, ஜன. 31: மதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர் எஸ்.மோகன்குமார் இல்லத் திருமண விழாவில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். மதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர் ேமாகன்குமார் - மீனாட்சி தம்பதியரின் மகள் டாக்டர் கயல்விழி - பொறியாளர் ஜெகதீஷ்குமார் ஆகியோரின் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது. மு.க.அழகிரி, இவரது மனைவி காந்தி அழகிரி தலைமை தாங்கி நடத்தி வைத்தனர். எம்பிக்கள் மாணிக்கதாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.ஐகோர்ட் நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி, நிஷாபானு, ஓய்வு நீதிபதி சி.டி.செல்வம், முதன்ைம மாவட்ட அமர்வு நீதிபதி நசீமாபானு, தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமானந்த்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர். பல்வேறு அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். திருமண விழாவில் பங்கேற்றவர்களை குறளரசன், காமாட்சி, சிவசிதம்பரம், பவானி, ராஜராஜன், வடிவேல், ராஜேஷ்குமார், ரக்க்ஷா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, தயாள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Related Stories: