வேட்டவலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி

வேட்டவலம், ஜன.31: வேட்டவலத்தில் நடமாடும் பேருந்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. 31வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் நடமாடும் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து மூலம் வேட்டவலம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கண்காட்சி பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி தொலைக்காட்சி பெட்டி மூலம் சாலை பாதுகாப்பு விதிகளை மீறுவதால் ஏற்படும் விபத்து மற்றும் இழப்புகள் குறித்தும், போக்குவரத்து விதிகள், போக்குவரத்து விதிகளை மீறுவதால் கிடைக்கும் தண்டணை மற்றும் அபராதம், பாதுகாப்பான வாகன போக்குவரத்துக்கான யோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருஞானம் கூறினார். பின்னர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Stories: