கோவை, ஜன. 31: கோவை சுகுணாபுரம் அடுத்த கோவைப்புதூர் பிரிவு அருகேயுள்ள சாய்பாபா கஸ்தூரி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். இதில், மார்டின் குழு நிறுவனங்களின் ஜோஷ் சார்லஸ் மார்டின் பங்கேற்று பாபா மந்திரை திறந்துவைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், பாபாவின் பாதம் கொண்டுவரப்பட்டு இருந்தது. இதை பக்தர்கள் வணங்கி சென்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அரவிந்குமார், டிரஸ்டிகள், விஜயகுமார் ஏ ஷா, நிகிதா ஷா உள்பட பலர் செய்திருந்தினர்.