வலிப்பு நோயுடன் மது குடித்த வாலிபர் சாவு

லால்குடி, ஜன.30: லால்குடி தெற்கு தெருவை சேர்ந்த பிச்சை மகன் லோகநாதன்(30). தொடர்ந்து மது அருந்தி வந்த லோகநாதனுக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. நேற்று வழக்கம்போல் மது அருந்திய லோகநாதனுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி எஸ்ஐ உதயகுமார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: