தேனி, ஜன. 30: மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தேனிமாவட்ட பிரிவின் சார்பில் தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளை மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் துவக்கி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 கண்பார்வையற்றோர், மனநலம் குன்றியோர், காதுகேளாதோர் கலந்து கொண்டனர்.