காங்கயம், ஜன.30:காங்கயம் பஸ் நிலைய வளாகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை கண்டித்து வி.எச்.பி. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வி.எச்.பி மாநில செயல் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். தர்மப்ரச்சார் அமைப்பாளர் அன்னூர் தங்கவேல், மாநில சம்பர்க் ப்ரமுக் ரஜினிகாந்த், மாநில அமைப்பாளர் பஜ்ரங்கள் பாரத் ஆகியோர் பேசினர். இதில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக, அரசியல் லாபத்திற்காக சில கட்சிகள் முஸ்லிம்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.