பாகூர், ஜன. 28: புதுவை பாகூர் அருகே சோரியாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்
புதுவை பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் அவ்வப்போது மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. மாட்டு வண்டிகளில் மணல் கொண்டு வரப்பட்டு மறைவான பகுதியில் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் லாரிகள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பாகூர் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.