பழநி, ஜன. 28: பழநி- புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட் பழுதால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு நோக்கி பயணிகள் ரயில் நேற்று இரவு 7.30 மணியளவில் பழநி வந்தது. இந்த ரயிலுக்காக பழநி- புது தாராபுரம் சாலை ரயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் ரயில் கடந்தும் கூட கேட் திறக்க முடியவில்லை. திறக்கும் கம்பி அறுந்ததால் கேட் திறப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.