காஞ்சிபுரம், ஜன.28: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நேற்று நடந்தது.
இதில் முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவை, கல்வி, திருமண உதவித்தொகைகள், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 197 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு மருத்துவ சான்றுடைய அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.