கடல் அலையில் சிக்கிய 2 பேரை காப்பாற்ற முயன்ற வாலிபர் சாவு: பெசன்ட்நகரில் பரிதாபம்

வேளச்சேரி: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கிய 2 பெண்களை மீட்க சென்ற 3 வாலிபர்களில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூரு விஜயநகரை சேர்ந்தவர் காவியா (18). இவர் வேலூரில் உள்ள விஐடியில் எம்.எஸ். ஐ.டி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தோழி பூர்ணிமா (21). இவர்கள் இருவரும் நேற்று பெசன்ட்நகர் எலியட்ஸ்  கடற்கரையை சுற்றி  பார்க்க வந்தனர். பின்னர் மாலை இருவரும் கடலில் இறங்கி குளித்தனர்.

அதேபோல், சென்னை எண்ணூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த நாக்பூரை சேர்ந்த மாயர் பதஸ்கான் (20), ராஜஸ்தான், ஜோத்பூரை சேர்ந்த ஆனந்த் (23), நியூ டெல்லியை சேர்ந்த அங்கித் (19) ஆகிய மூன்று பேரும் நேற்று  எலியட்ஸ் கடற்கரையை சுற்றி பார்க்க வந்தனர்.

அப்போது கடலில் குளித்துக்கொண்டிருந்த காவியா, பூர்ணிமா ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். இதை பார்த்த மூன்று பேரும் அந்த இரண்டு பெண்களை காப்பாற்ற கடலில் இறங்கி உள்ளனர். அப்போது அவர்களும் கடல்  அலையில் சிக்கினர்.

5 பேரும் கடல் அலையில் சிக்கி தவிப்பதை  பார்த்த  ஓடை குப்பம் கடற்கரை பாதுகாவலர்கள் சுதாகர், கலிசா, சந்தோஷ், கரண் ஆகியோர் கடலில் இறங்கி 5 பேரையும்   காப்பாற்றினர்.  உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மாயர் பதஸ்கான்,  காவியா, அங்கித் ஆகியோரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூர்ணிமா, ஆனந்த் ஆகியோரை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த மாயர்  பதஸ்கான்   சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்த தகவலின் பேரில் சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாயர் பதஸ்கான் சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம்  தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

2 மாணவர்கள் பலி

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையை ேசர்ந்தவர் பாலாஜி (20). கேளம்பாக்கம், படூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (18). இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார்  பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும், நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி, பாலாஜி மற்றும் மகேஷ் ஆகியோர்  கடலில் மூழ்கினர். நண்பர்கள் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று இரவு அவர்களது உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது.

Related Stories: