திருப்பூர்,ஜன.24: திருப்பூரில் சாலை போக்குவரத்து வார விழாவில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பள்ளி மாணவிகள் நேற்று மலர் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து துறைகள், போலீசார் ஆகியோரின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த விழாவில் சாலையில் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும். செல்போன் பேசி கொண்டே வாகனங்களை இயக்கக்கூடாது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைகவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் அடங்கிய கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு பேரணிகளும் நடைபெற்று வருகிறது.