குன்னூர், ஜன.24:குன்னூர் நகராட்சியில் ரூ.18 லட்சம் வாடகை தராததால் பார்க்கிங் ஏரியாவிற்கு சீல் வைக்கப்பட்டது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான பார்க்கிங் உள்ளது. இந்த பார்க்கிங் டெண்டர் முறையில் வாடகைக்கு விடப்படுகிறது. பார்க்கிங் உரிமையாளர் கடந்த எட்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளார். பல முறை எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தும் வாடகை பாக்கியை செலுத்தாததால் நகராட்சிக்கு ரூ.18 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷ்னர் பாலு பார்க்கினை சீல் வைக்க உத்தரவிட்டார்.