போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சாத்தூர், ஜன. 24: சாத்தூரில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முகாம் ஏற்பாடுகளை சாத்தூர் போக்குவரத்துத் காவல்துறை ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் ஏராளமான போக்குவரத்து காவல்துறையினர் கலந்துகொண்டு பொது மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.மேலும் மருத்துவ முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு ஆய்வாளர் வெங்கடாச்சலம் போக்குவரத்து விதிகள் பற்றியும் மனித நேயம் மற்றும் மக்கள் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் பண்புகள் பற்றியும் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். மருத்துவ முகாமில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆட்டோ, கார் மற்றும் வேன் ஓட்டுனர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Related Stories: