நித்திரவிளை, ஜன.24: நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ மீது பைக்கால் மோதி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டம் நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ், ஏட்டுகள் 3 பேர் உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் மாலை 6.15 மணி அளவில் நித்திரவிளை அருகே உள்ள பாலாமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சின்னத்துறையில் இருந்து நித்திரவிளை நோக்கி வந்துகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்துமாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சைகை காட்டினார். உடனே வாகனத்தை நிறுத்திய மார்த்தாண்டம்துறையை சேர்ந்த பொனிப்பாஸ் மகன் அனிஷ் (33), சிறப்பு எஸ்ஐயின் கால் மீது பைக்கை ஏற்றியுள்ளார்.