செய்யாறு, ஜன.24: செய்யாறில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஏடிஎஸ்பி அசோக்குமார் நேற்று விசாரணை நடத்தினார். செய்யாறு அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், டீக்கடை தொழிலாளி. இவரது மகன் கார்த்திக்(14). அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20ம் தேதி மாலை பள்ளிக்கு ெசன்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், பைங்கினர் ஏரிக்கு செல்லும் கால்வாயில் உள்ள பாறை மீது கார்த்திக் சடலமாக கிடந்தான். அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து, சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.