திருப்பூர், ஜன.23: இந்து சமய அறநிலை துறை சார்பில் காங்கயம் நீதிமன்றத்திற்கு ரூ.450 கோடி வாடகை பாக்கி கேட்ட விவகாரத்தில் அந்த நிலம் நீதித்துறைக்கானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றம் அமைந்துள்ள நிலம், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது என்றும், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை வாடகை பாக்கி, அதற்கு வட்டியை சேர்த்து தற்போதைய சந்தை மதிப்பு படி ரூ.450 கோடி உரிய காலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு செலுத்துமாறு சிவன்மலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.