ராஜபாளையம், ஜன. 23: ராஜபாளையம் அருகே, சேத்தூர் பேரூராட்சியில் பயனற்ற போர்வெல்லால் குழந்தைகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போர்வெல்லை முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே, சேத்தூர் பேரூராட்சி 6வது வார்டில் ஏகேஜி நகர் உள்ளது. இங்கு குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே, தனியாருக்கு சொந்தமான நூல் கண்டு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை பணியாளர்களின் பயன்பாட்டுக்காக, சில மாதங்களுக்கு முன்னதாக ஆலையின் முன்புறம் இரண்டு போர்வெல்கள் அமைக்கப்பட்டன. இதில் ஒன்றில் தண்ணீர் வரவில்லை. இந்த போர்வெல்லை முறையாக மூடாமல் வெறும் கல்லை வைத்து மூடியுள்ளனர். விநாயகர் கோயில் தெரு மிகவும் குறுகலாக இருப்பதால், குழந்தைகள் ஆலையின் முன்புறம் அடிக்கடி விளையாடுவர். கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பெண்களும் குழந்தைகளும் வருகின்றனர்.