காரியாபட்டி, ஜன. 23: காரியாபட்டியில் முன்னள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த தின விழா நடந்தது. பொதுகுழு உறுப்பினர் பழனி தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்சும் ஏராளமான திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கி வருகின்றனர். எம்ஜிஆர் ஆட்சியில் கிராமங்களுக்கு குடிநீர், சாலை வசதி செய்து தரப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்யப்பட்டது. மற்ற மாநிலங்கள் போற்றும் வகையில் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. தொடர் வளர்ச்சி காரணமாக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தின் 50 ஆண்டுகள் கோரிக்கையான மெடிக்கல் காலேஜ் கொண்டு வரப்பட்டுள்ளது.