சின்னாளபட்டி, ஜன. 23: சின்னாளபட்டி பகுதியில் நடந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வணிகர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சின்னாளபட்டி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் பணியாளர்கள் ஆய்வு செய்தனர். சின்னாளபட்டி பூஞ்சோலை, காமராஜர் சாலை, தேவாங்கர் பள்ளி சாலை, கஸ்தூரிபாய் மருத்துவமனை சாலை பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், லசரக்கு கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆய்வின்போது விதிமீறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.