திருச்செங்கோட்டில் இலவச மருத்துவ முகாம்

திருச்செங்கோடு, ஜன.23: திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தனியார் பள்ளி கல்லூரி வாகன டிரைவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களுக்கான பொது மருத்துவ முகாம் மற்றும் கண்சிகிச்சை முகாம் நடந்தது. இதில் எளையாம்பாளையம் விவேகானந்தா சிறப்பு மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு, டிரைவர்களுக்கு பல்வேறு  உடல் பரிசோதனைகள் நடத்தினர்.  மருத்துவ முகாமை திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மோட்டார்  வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி, செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ஷாநாஸ் பானு ஆகியோர்  கலந்து கொண்டனர். முகாமில் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு கண்  பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

Related Stories: