காளப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சேந்தமங்கலம்,  ஜன.23: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில், இதற்கு முன் இருபாலர் படிக்கும் பள்ளியாக செயல்பட்டு  வந்தது. அதன்பின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்ட பின் தனியாக  பிரிந்து ஆண்கள் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1994  முதல் 2001 வரை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகள்  சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  புஷ்பராசு தலைமை தாங்கினார். இதில் 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ,  மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, தங்களுக்கு பாடம்  நடத்திய 30 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். தங்களின்  பழைய நிகழ்வுகளை கூறி பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவ,  மாணவிகளின் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: