திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா கலைநிகழ்ச்சி ஒத்திகை

திருவண்ணாமலை, ஜன.22: திருவண்ணாமலை எஸ்பி அலுவலக வளாக ஆயுதப்படை மைதானத்தில், குடியரசு தின விழா கலை நிகழ்ச்சி ஒத்திகை நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, தேசிய கொடியை ஏற்றிவைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்க உள்ளார். மேலும், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிைலயில், ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின கலை நிகழ்ச்சி ஒத்திகை நேற்று மாலை நடந்தது. அதில், பள்ளி மாணவ, மாணவிகள் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம் உள்ளிட்டோர் ஒத்திகையை பார்வையிட்டனர். தொடர்ந்து இன்று காைல போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடக்கிறது.

Related Stories: