ஊட்டி, ஜன. 22:அமைப்பு சாரா நல வாரியங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் நாளை 23ம் தேதி குன்னூரில் நடக்கிறது. தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் கூறியிருப்பதாவது: கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர், அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், கைவிைன ெதாழிலாளர், காலணி தயாரிக்கும் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர், வீட்டு பணியாளர், பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென 17 நல வாரியங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு மற்றும் பயனாளிகளுக்கு நல வாரிய அட்டை வழங்கும் முகாம் 23ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் குன்னூர் டவுன் ஆரம்பப் பள்ளியில் வளாகத்தில் நடக்கிறது.