கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான சேவைமையக் கட்டிடம்

கொள்ளிடம், ஜன.22: கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான சேவைமையக் கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தின் பின்புறம் வளர்ந்துள்ள ஒரு பனைமரத்தில் மட்டையில் ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான விஷவண்டுகள் கூடு கட்டி வசித்து வருகின்றன. காலை மற்றும் மாலைப்பொழுதுகளில் மரத்திலிருந்து பறந்து கீழே வந்து உலாவருவதால், சேவை மையக் கட்டிடத்திற்குள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டிடம் அமைந்துள்ள நடுத்தெருச்சாலையிலும் நடந்து செல்ல அனைவரும் அச்சமடைந்தனர். வேகமாக காற்றடிக்கும் போதெல்லாம் கூட்டிலிருந்து சப்தத்துடன் பறந்து வெளியேறும் வண்டுகள் குழந்தைகள் மற்றும் பெண்களை தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வடகால் சேவைமையக்க்கட்டிடம் பின்புறம் கூடுகட்டி வாழ்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் விஷவண்டுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: