திருவண்ணாமலை, ஜன.21: திருவண்ணாமலையில் நேற்று சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்து பைக் ஓட்டியபடி சென்றார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று முதல் வருகிற 27ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று திருவண்ணாமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருவண்ணாமலை- வேலூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் இருந்து பேரணி புறப்பட்டது. பேரணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்து, ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். இப்பேரணியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ெஹல்மெட் அணிந்தபடி கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் முன் இருந்து புறப்பட்ட இந்த பேரணி அண்ணாநுழைவு வாயில் அருகே முடிவடைந்தது.