ஊட்டி, ஜன. 20: விடுமுறை நாளான நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகைக்கு கடந்த 15ம் தேதியில் இருந்து நேற்று வரை 5 நாட்கள் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்க தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.விடுமுறையை கொண்டாடுவதற்காக கடந்த செவ்வாய்கிழமை மாலை முதலே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தங்களும் களை கட்டியது. ஞாயிற்றுகிழமை வார விடுமுறையான நேற்று ஊட்டி ஏரியில் அமைந்துள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.