கோவை, ஜன.20: கோவை மாவட்டத்தில் சிறார் ஆபாச படம் பார்ப்பவர்கள், பதிவிறக்கும் செய்து அனுப்புவோர் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறார் ஆபாச படம் பார்ப்பது, வலை தலங்களில் பதிவிறக்கம் செய்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் அனுப்புவது குற்றமான செயல் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சிறார் ஆபாச படங்களை அனுப்புவோர் தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த வாரம் கருமத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் மற்றும் பொள்ளாச்சியி–்ல் வசித்து வந்த வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தங்களது செல்போனில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தங்களது நண்பர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.