பவானி, ஜன. 20: பெரியாரை அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை கோரி திராவிடர் கழக கூட்டமைப்பினர் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர்.கடந்த 14ம் தேதி சென்னையில் நடந்த பத்திரிகை ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மறைத்து, உண்மைக்கு மாறான பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ரஜினி பேசியுள்ளார். மேலும், வதந்தியை பரப்பி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி அம்மாப்பேட்டை போலீசில் நேற்று புகார் அளித்தார்.