திருவில்லிபுத்தூர் ஜன. 20: திருவில்லிபுத்தூர் அருகே, குண்டும் குழியுமாக இருக்கும் கீழப்பொட்டல்பட்டி சாலையை சீரமைத்து கூடுதல் அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே, பி.ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் கீழப்பொட்டல்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு காலையில் 8 மற்றும் 9:30 மணி, மாலையில் 4 மற்றும் 5 மணி என 4 வேளை அரசு பஸ் இயக்கப்படுகிறது. மாலை 7:30 மணிக்கு தனியார் மினிபஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், திருவில்லிபுத்தூரில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் இக்கிராம மாணவர்கள் சிறப்பு வகுப்பு முடிந்து மாலை 6 மணிக்கு, அங்கிருந்து இனாம்கரிசல்குளம் வழியாக பெருமாள்தேவன்பட்டிக்கு வரும் பஸ்சில் வந்து கீழ்ப்பொட்டல்பட்டி முகப்பில் இறங்கி குண்டும், குழியுமான சாலை வழியாக ஊருக்கு செல்கின்றனர். இந்த சாலையில் மின்விளக்கு வசதியும் இல்லை.