சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

காரியாபட்டி, ஜன. 20: காரியாபட்டி அருகே, கல்குறிச்சியில் உள்ள போகர் பாலிடெக்னி கல்லூரியில், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி நிறுவனர் பிரபாகர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். பந்தனேந்தல் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். பின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஐ தமிழழகன் தலைமையில், வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. பள்ளி மாணவர்கள் பாதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Related Stories: