மது விற்ற 15 பேர் கைது

சிவகாசி, ஜன. 19: சிவகாசி டவுன் மற்றும் கிழக்கு போலீசார் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மது விற்பவர்களை கண்டறிய ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற கார்த்திக் (39), ஈஸ்வரன் (20), பெத்தனசாமி (25), காளியப்பன் (46), கார்த்தி (26), முருகன் (43), சுப்பிரமணியன் (58), பரமசிவம் (43), வீரபாண்டி (29), கருப்பையா (70), மாரியப்பன் (60), ஜெயக்குமார் (35), பாண்டி (49), வேலாயுதம் (36), முருகேசன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 184 மதுபாட்டில்களையும், 2,920 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: