வி.கே.புரம் நகராட்சியில் உரம் விற்பனை

வி.கே.புரம், ஜன.20:  வி.கே.புரம் நகராட்சியில் தயாரிக்கப்பட்ட உரம் விற்பனை செய்யப்பட்டு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.  வி.கே.புரம் நகராட்சியில் 21 வார்டுகளிலிருந்து பெறப்பட்ட குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகளாக பிரிக்க படுகின்றன. இதில் மக்கும் குப்பைகளிலிருந்து  நுண்ணுயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மக்காத  உரங்கள் தனியார் சிமென்ட் ஆலைக்கு அனுப்ப படுகின்றன. இந்நிலையில் நகராட்சி உரக்கிடங்கில் தயாரிக்கப்பட்ட 2டன் உரத்தை விற்றதில்  பெறப்பட்ட ரூ.8ஆயிரத்தை அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் காஞ்சனா பகிர்ந்து அளித்தார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன், சுகாதார மேற்பார்வையாளர் மில்லர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: