கிருஷ்ணகிரி, ஜன.20: தர்மபுரி மாவட்டம் முழுவதும் தினமும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுமென விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தர்மபுரி மாவட்ட செயலாளர் பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் குடிக்கும் குடிநீரில் புளோரைடு பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் விளைவாக அரசு பல ஆண்டுகளாக திட்டமிட்டு கடந்த 7 வருடங்களாக ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகையின்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஒகேனக்கல் குடிநீர் சரியாக கிடைக்கவில்லை.