ஊட்டி, ஜன. 19: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது என அமைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட தி.மு.க. இளஞைர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் வரவேற்றார். தலைமை செற்குழு உறுப்பினர் முஸ்தபா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான கிரிக்கெட் குழுக்களை நேரில் சென்று சந்தித்து பங்குபெற செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.