புதுச்சேரி, ஜன. 19: புதுவை லாஸ்பேட்டையில் சமீபத்தில் பெய்த மழையால் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமானது. கல்வி நிறுவனங்கள் அதிகளவில் அமைந்துள்ள இப்பகுதியில் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி வந்தன. இருப்பினும் அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. இதை கண்டிக்கும் வகையிலும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாகவும், லாஸ்பேட்டை அசோக் நகரில் இந்த இயக்கங்களின் சார்பில் நேற்று விண்வெளியில் நடக்கும் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.