நாமக்கல், ஜன.19: நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை துவங்கி, 8 மணி வரையிலும் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டது. நீர்நிலைகள் வறண்டு போனது. இந்த ஆண்டு மாவட்டம் முழுவதுமாக நல்ல மழை பெய்துள்ளது. காவிரியில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடி செய்து, தற்போது அறுவடை பணிகளை துவக்கியுள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அதிகாலை கடும் குளிர்காற்று வீசுகிறது. தொடர்ந்து காலை 8 மணி வரை பனிப்பொழிவு காணப்படுகிறது.