திருப்போரூர், ஜன.19: கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் டில்லி. இவரது மகன் அலெக்சாண்டர் (27). திருமணம், காது குத்துதல், மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் உள்பட பல நிகழ்ச்சி களுக்கு அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அலெக்சாண்டர், கோயில் நிகழ்ச்சி ஒன்றில் அலங்கார விளக்குகள் அமைக்க சென்றார். அங்கு அமைத்து கொடுத்து விட்டு, இரவு 8 மணியளவில் தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது, எதிரே அசுர வேகத்தில் வந்த கார், அவரது பைக் மீது பயங்கரமாக மோதியது.