திருவில்லிபுத்தூர், ஜன.14: திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியப் பெருந்தலைவர் மல்லி ஆறுமுகம் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர்.