விருதுநகர், ஜன. 14: தமிழ்நாடு அறிவியல் தொழிலநுட்ப மையம் சார்பில் விருதுகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்கும் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தங்களின் அறிவியல் படைப்புகளை உருவாக்க ரூ.10 ஆயிரம் ஒவ்வொருக்கும் வழங்கப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் 55 மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் வைத்திருந்தனர். கண்காட்சியை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி துவக்கி வைத்தார். புதுடில்லி தேசிய புத்தாக்க அறிவியல் கட்டளை மெரின்டயானா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய டேவிட் பொன்னுத்துரை சிறப்புரையாற்றினர். கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு, அணு மற்றும் அனல் மின்நிலைய மாதிரி, சோலார் சிட்டி, செயற்கை கோள், மூலிகை தாவரங்கள், தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன.