தாம்பரம் அருகே கார் டிரைவர் தற்கொலை

தாம்பரம், ஜன. 14: தாம்பரம் அருகே கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், ராமகிருஷ்ணாபுரம், பாண்டியன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (32). கார் டிரைவர். இவரது மனைவி ஷோபனா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலசுப்பிரமணியன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், மனைவி கோபித்து கொண்டு பக்கத்து தெருவில் உள்ளதாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதில், மனமுடைந்த பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் மாலை குடித்து விட்டு வந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: