திருமலை, ஜன.13: பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய தொலைக்காட்சி தலைவர் ஆடியோ விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி தலைவர் பிருத்திவிராஜ் பெண் ஊழியர் ஒருவரிடம் பேசிய காதல் உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஐதராபாத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏழுமலையானின் பூஜைகள் மற்றும் ஆராதனைகள் இந்து தர்ம பிரசாரத்திற்காக தொடங்கப்பட்டது தேவஸ்தான தொலைக்காட்சி.