தென்காசி, ஜன. 13: உலக இளைஞர் தினத்தையொட்டி மேலகரம் மகரிஷி வித்யா மந்திர் மழலையர் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாறுவேட போட்டி நடந்தது. மேலகரம் எழில்நகரில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் நடந்த இப்போட்டிகளின் துவக்கவிழாவுக்கு பள்ளித் தாளாளர் முத்தையா தலைமை வகித்தார். முதல்வர் ஆரியமாலா வரவேற்றார். இதையொட்டி விநாயகர், முருகன், கிருஷ்ணர், ராதை, பாரதியார், ஜவஹர்லால் நேரு, ஜான்சிராணி, வீரபாண்டிய கட்டபொம்மன், காந்தியடிகள், விவேகானந்தர், காவலர், மருத்துவர், பொறியாளர், ஆசிரியை, அப்துல்கலாம், ராக்கெட் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பலர் பல்வேறு வேடமணிந்து பங்கேற்றனர்.