நாமக்கல், ஜன.13: திருச்செங்கோட்டில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதற்காக விண்ணப்பித்த 2618 நபர்களில் 699 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல்படை காவலர் பணிக்கான எழுத்துதேர்வு நேற்று நாமக்கல் மாவட்ம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 2618 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 699 பேர் தேர்வு எழுதவரவில்லை. 1911 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு நடைபெறுவதை சமூகநீதி மற்றும் பாதுகாப்பு பிரிவு டிஐஜி லட்சுமி நேரில் பார்வையிட்டார்.